குறள்: 378துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பாலஊட்டா கழியு மெனின்.

The destitute with ascetics merit share,If fate to visit with predestined ills would spare

மு.வரதராசன் உரை

வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை

துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.

கலைஞர் உரை

நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர்

Explanation

The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them suffer the hindrances to which they are liable, and they pass away

Kural Info

குறள் எண்:378
Category:அறத்துப்பால்
அதிகாரம்:ஊழ்
இயல்:ஊழியல்