குறள்: 211கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன் ஆற்றுங் கொல்லோ உலகு.
Duty demands no recompense; to clouds of heaven,By men on earth, what answering gift is given
இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.
பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?
கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்
Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?
| குறள் எண்: | 211 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | ஒப்புரவறிதல் |
| இயல்: | இல்லறவியல் |