குறள்: 211கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன் ஆற்றுங் கொல்லோ உலகு.

Duty demands no recompense; to clouds of heaven,By men on earth, what answering gift is given

மு.வரதராசன் உரை

இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.

சாலமன் பாப்பையா உரை

பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?

கலைஞர் உரை

கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்

Explanation

Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?

Kural Info

குறள் எண்:211
Category:அறத்துப்பால்
அதிகாரம்:ஒப்புரவறிதல்
இயல்:இல்லறவியல்