மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 211கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன் ஆற்றுங் கொல்லோ உலகு.
குறள்: 212தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு.
குறள்: 213புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதேஒப்புரவின் நல்ல பிற.
குறள்: 214ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும்.
குறள்: 215ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு.
குறள்: 216பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்நயனுடை யான்கண் படின்.
குறள்: 217மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்பெருந்தகை யான்கண் படின்.
குறள்: 218இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்கடனறி காட்சி யவர்.
குறள்: 219நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீரசெய்யாது அமைகலா வாறு.
குறள்: 220ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்விற்றுக்கோள் தக்க துடைத்து.