குறள்: 214ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும்.

Who knows what's human life's befitting grace,He lives; the rest 'mongst dead men have their place

மு.வரதராசன் உரை

ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை

உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.

கலைஞர் உரை

ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்

Explanation

He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence) He who knows them not will be reckoned among the dead

Kural Info

குறள் எண்:214
Category:அறத்துப்பால்
அதிகாரம்:ஒப்புரவறிதல்
இயல்:இல்லறவியல்