குறள்: 215ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு.

The wealth of men who love the 'fitting way,' the truly wise,Is as when water fills the lake that village needs supplies

மு.வரதராசன் உரை

ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.

கலைஞர் உரை

பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்

Explanation

The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank

Kural Info

குறள் எண்:215
Category:அறத்துப்பால்
அதிகாரம்:ஒப்புரவறிதல்
இயல்:இல்லறவியல்