குறள்: 216பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்நயனுடை யான்கண் படின்.
A tree that fruits in th' hamlet's central mart,Is wealth that falls to men of liberal heart
ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.
பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.
ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்
The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town
| குறள் எண்: | 216 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | ஒப்புரவறிதல் |
| இயல்: | இல்லறவியல் |