குறள்: 218இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்கடனறி காட்சி யவர்.

E'en when resources fall, they weary not of 'kindness due,'-They to whom Duty's self appears in vision true

மு.வரதராசன் உரை

ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை

செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.

கலைஞர் உரை

தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்

Explanation

The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth

Kural Info

குறள் எண்:218
Category:அறத்துப்பால்
அதிகாரம்:ஒப்புரவறிதல்
இயல்:இல்லறவியல்