குறள்: 192பயனில பல்லார்முன் சொல்லல் நயனிலநட்டார்கண் செய்தலிற் றீது.

Words without sense, where many wise men hear, to pourThan deeds to friends ungracious done offendeth more

மு.வரதராசன் உரை

பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.

கலைஞர் உரை

பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்

Explanation

To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends

Kural Info

குறள் எண்:192
Category:அறத்துப்பால்
அதிகாரம்:பயனில சொல்லாமை
இயல்:இல்லறவியல்