மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 191பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும்.
குறள்: 192பயனில பல்லார்முன் சொல்லல் நயனிலநட்டார்கண் செய்தலிற் றீது.
குறள்: 193நயனிலன் என்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை.
குறள்: 194நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்பண்பில்சொல் பல்லா ரகத்து.
குறள்: 195சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனிலநீர்மை யுடையார் சொலின்.
குறள்: 196பயனில் சொல் பராட்டு வானை மகன்எனல்மக்கட் பதடி யெனல்.
குறள்: 197நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்பயனில சொல்லாமை நன்று.
குறள்: 198அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்பெரும்பயன் இல்லாத சொல்.
குறள்: 199பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்தமாசறு காட்சி யவர்.
குறள்: 200சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லிற் பயனிலாச் சொல்.