குறள்: 199பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்தமாசறு காட்சி யவர்.

The men of vision pure, from wildering folly free,Not e'en in thoughtless hour, speak words of vanity

மு.வரதராசன் உரை

மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை

மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.

கலைஞர் உரை

மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்

Explanation

Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not

Kural Info

குறள் எண்:199
Category:அறத்துப்பால்
அதிகாரம்:பயனில சொல்லாமை
இயல்:இல்லறவியல்