குறள்: 151அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.

As earth bears up the men who delve into her breast,To bear with scornful men of virtues is the best

மு.வரதராசன் உரை

தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்

சாலமன் பாப்பையா உரை

தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்

கலைஞர் உரை

தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்

Explanation

To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues

Kural Info

குறள் எண்:151
Category:அறத்துப்பால்
அதிகாரம்:பொறையுடைமை
இயல்:இல்லறவியல்