மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 151அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.
குறள்: 152பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று.
குறள்: 153இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.
குறள்: 154நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமைபோற்றி யொழுகப் படும்.
குறள்: 155ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
குறள்: 156ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.
குறள்: 157திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்துஅறனல்ல செய்யாமை நன்று.
குறள்: 158மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்தகுதியான் வென்று விடல்.
குறள்: 159துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
குறள்: 160உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொல் நோற்பாரின் பின்.