குறள்: 153இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.

The sorest poverty is bidding guest unfed depart;The mightiest might to bear with men of foolish heart

மு.வரதராசன் உரை

வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

சாலமன் பாப்பையா உரை

வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது

கலைஞர் உரை

வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது

Explanation

To neglect hospitality is poverty of poverty To bear with the ignorant is might of might

Kural Info

குறள் எண்:153
Category:அறத்துப்பால்
அதிகாரம்:பொறையுடைமை
இயல்:இல்லறவியல்