குறள்: 154நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமைபோற்றி யொழுகப் படும்.

Seek'st thou honour never tarnished to retain;So must thou patience, guarding evermore, maintain

மு.வரதராசன் உரை

நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்

கலைஞர் உரை

பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்

Explanation

If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience

Kural Info

குறள் எண்:154
Category:அறத்துப்பால்
அதிகாரம்:பொறையுடைமை
இயல்:இல்லறவியல்