குறள்: 63தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்தம்தம் வினையான் வரும்.

'Man's children are his fortune,' say the wise;From each one's deeds his varied fortunes rise

மு.வரதராசன் உரை

தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை

பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.

கலைஞர் உரை

தம் பொருள் என்பது தம்மக்களையேயாம் அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை

Explanation

Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf

Kural Info

குறள் எண்:63
Category:அறத்துப்பால்
அதிகாரம்:மக்கட்பேறு
இயல்:இல்லறவியல்