மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 61பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்தமக்கட்பேறு அல்ல பிற.
குறள்: 62எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்பண்புடை மக்கட் பெறின்.
குறள்: 63தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்தம்தம் வினையான் வரும்.
குறள்: 64அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்சிறுகை அளாவிய கூழ்.
குறள்: 65மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
குறள்: 66குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்.
குறள்: 67தந்தை மகற்காற்று நன்றி அவையத்துமுந்தி இருப்பச் செயல்.
குறள்: 68தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்னுயிர்க் கெல்லாம் இனிது.
குறள்: 69ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாய்.
குறள்: 70மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தைஎன்நோற்றான் கொல் எனும் சொல்.