குறள்: 67தந்தை மகற்காற்று நன்றி அவையத்துமுந்தி இருப்பச் செயல்.
Sire greatest boon on son confers, who makes him meet,In councils of the wise to fill the highest seat
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.
தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்
The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned
| குறள் எண்: | 67 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | மக்கட்பேறு |
| இயல்: | இல்லறவியல் |