குறள்: 231ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு.

See that thy life the praise of generous gifts obtain;Save this for living man exists no real gain

மு.வரதராசன் உரை

வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.

கலைஞர் உரை

கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை

Explanation

Give to the poor and live with praise There is no greater profit to man than that

Kural Info

குறள் எண்:231
Category:அறத்துப்பால்
அதிகாரம்:புகழ்
இயல்:இல்லறவியல்