மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 231ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு.
குறள்: 232உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்றுஈவார்மேல் நிற்கும் புகழ்.
குறள்: 233ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்பொன்றாது நிற்பதொன் றில்.
குறள்: 234நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்போற்றாது புத்தேள் உலகு.
குறள்: 235நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்வித்தகர்க் கல்லால் அரிது.
குறள்: 236தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று.
குறள்: 237புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மைஇகழ்வாரை நோவது எவன்?
குறள்: 238வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்எச்சம் பெறாஅ விடின்.
குறள்: 239வசையிலா வண்பயன் குன்றும் இசையிலாயாக்கை பொறுத்த நிலம்.
குறள்: 240வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழியவாழ்வாரே வாழா தவர்.