குறள்: 233ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்பொன்றாது நிற்பதொன் றில்.

Save praise alone that soars on high,Nought lives on earth that shall not die

மு.வரதராசன் உரை

உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.

கலைஞர் உரை

ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை

Explanation

There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness

Kural Info

குறள் எண்:233
Category:அறத்துப்பால்
அதிகாரம்:புகழ்
இயல்:இல்லறவியல்