குறள்: 239வசையிலா வண்பயன் குன்றும் இசையிலாயாக்கை பொறுத்த நிலம்.

The blameless fruits of fields' increase will dwindle down,If earth the burthen bear of men without renown

மு.வரதராசன் உரை

புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.

சாலமன் பாப்பையா உரை

புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.

கலைஞர் உரை

புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்

Explanation

The ground which supports a body without fame will diminish in its rich produce

Kural Info

குறள் எண்:239
Category:அறத்துப்பால்
அதிகாரம்:புகழ்
இயல்:இல்லறவியல்