குறள்: 268தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனையமன்னுயி ரெல்லாந் தொழும்.

Who gains himself in utter self-control,Him worships every other living soul

மு.வரதராசன் உரை

தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.

சாலமன் பாப்பையா உரை

தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.

கலைஞர் உரை

``தனது உயிர்'' என்கிற பற்றும், ``தான்'' என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்

Explanation

All other creatures will worship him who has attained the control of his own soul

Kural Info

குறள் எண்:268
Category:அறத்துப்பால்
அதிகாரம்:தவம்
இயல்:துறவறவியல்