மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 261உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமைஅற்றே தவத்திற் குரு.
குறள்: 262தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனைஅஃதிலார் மேற்கொள் வது.
குறள்: 263துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்மற்றை யவர்கள் தவம்.
குறள்: 264ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்எண்ணின் தவத்தான் வரும்.
குறள்: 265வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்ஈண்டு முயலப் படும்.
குறள்: 266தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
குறள்: 267சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
குறள்: 268தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனையமன்னுயி ரெல்லாந் தொழும்.
குறள்: 269கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
குறள்: 270இலர்பல ராகிய காரணம் நோற்பார்சிலர்பலர் நோலா தவர்.