குறள்: 201தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை என்னும் செருக்கு.

With sinful act men cease to feel the dread of ill within,The excellent will dread the wanton pride of cherished sin

மு.வரதராசன் உரை

தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.

சாலமன் பாப்பையா உரை

தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.

கலைஞர் உரை

தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்

Explanation

Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin

Kural Info

குறள் எண்:201
Category:அறத்துப்பால்
அதிகாரம்:தீவினையச்சம்
இயல்:இல்லறவியல்