மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 201தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை என்னும் செருக்கு.
குறள்: 202தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்.
குறள்: 203அறிவினுள் எல்லாந் தலையென்ப தீயசெறுவார்க்கும் செய்யா விடல்.
குறள்: 204மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
குறள்: 205இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்இலனாகும் மற்றும் பெயர்த்து.
குறள்: 206தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான்.
குறள்: 207எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகைவீயாது பின்சென்று அடும்.
குறள்: 208தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னைவீயாது அஇஉறைந் தற்று.
குறள்: 209தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்துன்னற்க தீவினைப் பால்.
குறள்: 210அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின்.