குறள்: 202தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்.

Since evils new from evils ever grow,Evil than fire works out more dreaded woe

மு.வரதராசன் உரை

தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

சாலமன் பாப்பையா உரை

நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.

கலைஞர் உரை

தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்

Explanation

Because evil produces evil, therefore should evil be feared more than fire

Kural Info

குறள் எண்:202
Category:அறத்துப்பால்
அதிகாரம்:தீவினையச்சம்
இயல்:இல்லறவியல்