குறள்: 203அறிவினுள் எல்லாந் தலையென்ப தீயசெறுவார்க்கும் செய்யா விடல்.

Even to those that hate make no return of ill;So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil

மு.வரதராசன் உரை

தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை

தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.

கலைஞர் உரை

தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்

Explanation

So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil

Kural Info

குறள் எண்:203
Category:அறத்துப்பால்
அதிகாரம்:தீவினையச்சம்
இயல்:இல்லறவியல்