குறள்: 205இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்இலனாகும் மற்றும் பெயர்த்து.

Make not thy poverty a plea for ill;Thy evil deeds will make thee poorer still

மு.வரதராசன் உரை

யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.

சாலமன் பாப்பையா உரை

தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.

கலைஞர் உரை

வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்

Explanation

Commit not evil, saying, "I am poor": if you do, you will become poorer still

Kural Info

குறள் எண்:205
Category:அறத்துப்பால்
அதிகாரம்:தீவினையச்சம்
இயல்:இல்லறவியல்