குறள்: 209தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்துன்னற்க தீவினைப் பால்.
Beware, if to thyself thyself is dear,Lest thou to aught that ranks as ill draw near
ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.
தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.
தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது
If a man love himself, let him not commit any sin however small
| குறள் எண்: | 209 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | தீவினையச்சம் |
| இயல்: | இல்லறவியல் |