குறள்: 209தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்துன்னற்க தீவினைப் பால்.

Beware, if to thyself thyself is dear,Lest thou to aught that ranks as ill draw near

மு.வரதராசன் உரை

ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.

கலைஞர் உரை

தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது

Explanation

If a man love himself, let him not commit any sin however small

Kural Info

குறள் எண்:209
Category:அறத்துப்பால்
அதிகாரம்:தீவினையச்சம்
இயல்:இல்லறவியல்