குறள்: 210அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின்.

The man, to devious way of sin that never turned aside,From ruin rests secure, whatever ills betide

மு.வரதராசன் உரை

ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.

சாலமன் பாப்பையா உரை

தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.

கலைஞர் உரை

வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க

Explanation

Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path

Kural Info

குறள் எண்:210
Category:அறத்துப்பால்
அதிகாரம்:தீவினையச்சம்
இயல்:இல்லறவியல்