குறள்: 347பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்பற்றி விடாஅ தவர் க்கு.

Who cling to things that cling and eager clasp,Griefs cling to them with unrelaxing grasp

மு.வரதராசன் உரை

யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.

சாலமன் பாப்பையா உரை

ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.

கலைஞர் உரை

பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன

Explanation

Sorrows will never let go their hold of those who give not up their hold of desire

Kural Info

குறள் எண்:347
Category:அறத்துப்பால்
அதிகாரம்:துறவு
இயல்:துறவறவியல்