துறவு

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 341யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் இலன்.

குறள்: 342வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்ஈண்டுஇயற் பால பல.

குறள்: 343அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

குறள்: 344இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமைமயலாகும் மற்றும் பெயர்த்து.

குறள்: 345மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்உற்றார்க்கு உடம்பும் மிகை.

குறள்: 346யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்குஉயர்ந்த உலகம் புகும்.

குறள்: 347பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்பற்றி விடாஅ தவர் க்கு.

குறள்: 348தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கிவலைப்பட்டார் மற்றை யவர்.

குறள்: 349பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்றுநிலையாமை காணப் படும்.

குறள்: 350பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு.