குறள்: 350பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு.

Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling,Cling to that bond, to get thee free from every clinging thing

மு.வரதராசன் உரை

பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.

கலைஞர் உரை

எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும் துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்

Explanation

Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire

Kural Info

குறள் எண்:350
Category:அறத்துப்பால்
அதிகாரம்:துறவு
இயல்:துறவறவியல்