குறள்: 291வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல்.

You ask, in lips of men what 'truth' may be;'Tis speech from every taint of evil free

மு.வரதராசன் உரை

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை

உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.

கலைஞர் உரை

பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்

Explanation

Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others)

Kural Info

குறள் எண்:291
Category:அறத்துப்பால்
அதிகாரம்:வாய்மை
இயல்:துறவறவியல்