வாய்மை

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 291வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல்.

குறள்: 292பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கும் எனின்.

குறள்: 293தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

குறள்: 294உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன்.

குறள்: 295மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை.

குறள்: 296பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும்.

குறள்: 297பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று.

குறள்: 298புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும்.

குறள்: 299எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு.

குறள்: 300யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற.