குறள்: 292பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கும் எனின்.

Falsehood may take the place of truthful word,If blessing, free from fault, it can afford

மு.வரதராசன் உரை

குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.

சாலமன் பாப்பையா உரை

குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.

கலைஞர் உரை

குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்

Explanation

Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault

Kural Info

குறள் எண்:292
Category:அறத்துப்பால்
அதிகாரம்:வாய்மை
இயல்:துறவறவியல்