குறள்: 295மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை.

Greater is he who speaks the truth with full consenting mindThan men whose lives have penitence and charity combined

மு.வரதராசன் உரை

ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.

சாலமன் பாப்பையா உரை

உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.

கலைஞர் உரை

உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்

Explanation

He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities

Kural Info

குறள் எண்:295
Category:அறத்துப்பால்
அதிகாரம்:வாய்மை
இயல்:துறவறவியல்