குறள்: 296பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும்.

No praise like that of words from falsehood free;This every virtue yields spontaneously

மு.வரதராசன் உரை

ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை

பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.

கலைஞர் உரை

பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்

Explanation

There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue

Kural Info

குறள் எண்:296
Category:அறத்துப்பால்
அதிகாரம்:வாய்மை
இயல்:துறவறவியல்