குறள்: 300யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற.

Of all good things we've scanned with studious care,There's nought that can with truthfulness compare

மு.வரதராசன் உரை

யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை

சிறந்தவை என்று நான் கண்டு அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ஒன்றும் இல்லை.

கலைஞர் உரை

வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்

Explanation

Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness

Kural Info

குறள் எண்:300
Category:அறத்துப்பால்
அதிகாரம்:வாய்மை
இயல்:துறவறவியல்