குறள்: 304நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற.

Wrath robs the face of smiles, the heart of joy,What other foe to man works such annoy

மு.வரதராசன் உரை

முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?

சாலமன் பாப்பையா உரை

முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?

கலைஞர் உரை

சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்

Explanation

What other foe to man works such annoy?

Kural Info

குறள் எண்:304
Category:அறத்துப்பால்
அதிகாரம்:வெகுளாமை
இயல்:துறவறவியல்