வெகுளாமை

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 301செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என்?

குறள்: 302செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற.

குறள்: 303மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும்.

குறள்: 304நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற.

குறள்: 305தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்.

குறள்: 306சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும்.

குறள்: 307சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

குறள்: 308இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.

குறள்: 309உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின்.

குறள்: 310இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை.