குறள்: 305தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்.

If thou would'st guard thyself, guard against wrath alway;'Gainst wrath who guards not, him his wrath shall slay

மு.வரதராசன் உரை

ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.

சாலமன் பாப்பையா உரை

தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.

கலைஞர் உரை

ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்

Explanation

If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him

Kural Info

குறள் எண்:305
Category:அறத்துப்பால்
அதிகாரம்:வெகுளாமை
இயல்:துறவறவியல்