குறள்: 309உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின்.

If man his soul preserve from wrathful fires,He gains with that whate'er his soul desires

மு.வரதராசன் உரை

ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.

சாலமன் பாப்பையா உரை

உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.

கலைஞர் உரை

உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்

Explanation

If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of

Kural Info

குறள் எண்:309
Category:அறத்துப்பால்
அதிகாரம்:வெகுளாமை
இயல்:துறவறவியல்