குறள்: 180இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்வேண்டாமை என்னுஞ் செருக்கு.

From thoughtless lust of other's goods springs fatal ill,Greatness of soul that covets not shall triumph still

மு.வரதராசன் உரை

வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை

பின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்‌.

கலைஞர் உரை

விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்

Explanation

To covet (the wealth of another) regardless of consequences will bring destruction That greatness (of mind) which covets not will give victory

Kural Info

குறள் எண்:180
Category:அறத்துப்பால்
அதிகாரம்:வெஃகாமை
இயல்:இல்லறவியல்