மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 171நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும்.
குறள்: 172படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்நடுவன்மை நாணு பவர்.
குறள்: 173சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரேமற்றின்பம் வேண்டு பவர்.
குறள்: 174இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்றபுன்மையில் காட்சி யவர்.
குறள்: 175அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்வெஃகி வெறிய செயின்.
குறள்: 176அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்பொல்லாத சூழக் கெடும்.
குறள்: 177வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்மாண்டற் கரிதாம் பயன்.
குறள்: 178அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள்.
குறள்: 179அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்திறன்அறிந் தாங்கே திரு.
குறள்: 180இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்வேண்டாமை என்னுஞ் செருக்கு.