குறள்: 89உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு.

To turn from guests is penury, though worldly goods abound;'Tis senseless folly, only with the senseless found

மு.வரதராசன் உரை

செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.

சாலமன் பாப்பையா உரை

செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.

கலைஞர் உரை

விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்

Explanation

That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth It is the property of the stupid

Kural Info

குறள் எண்:89
Category:அறத்துப்பால்
அதிகாரம்:விருந்தோம்பல்
இயல்:இல்லறவியல்