விருந்தோம்பல்

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 81இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு.

குறள்: 82விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண் டற்பாற் றன்று.

குறள்: 83வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கைபருவந்து பாழ்படுதல் இன்று.

குறள்: 84அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல்.

குறள்: 85வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பிமிச்சில் மிசைவான் புலம்.

குறள்: 86செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்வருந்து வானத் தவர்க்கு.

குறள்: 87இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்துணைத்துணை வேள்விப் பயன்.

குறள்: 88பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார்.

குறள்: 89உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு.

குறள்: 90மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்துநோக்கக் குநழ்யும் விருந்து.