குறள்: 1141அலரெழ ஆருயிர் ந஧ற்கும் அதனைப்பலரறியார் பாக்கியத் தால்.

By this same rumour's rise, my precious life stands fast;Good fortune grant the many know this not

மு.வரதராசன் உரை

(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.

சாலமன் பாப்பையா உரை

ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்யம்.

கலைஞர் உரை

எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள்

Explanation

My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of

Kural Info

குறள் எண்:1141
Category:காமத்துப்பால்
அதிகாரம்:அலர் அறிவுறுத்தல்
இயல்:களவியல்