மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 1141அலரெழ ஆருயிர் நற்கும் அதனைப்பலரறியார் பாக்கியத் தால்.
குறள்: 1142மலரன்ன கண்ணாள் அருமை அறியாதுஅலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
குறள்: 1143உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
குறள்: 1144கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்தவ்வென்னும் தன்மை இழந்து.
குறள்: 1145களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்வெளிப்படுந் தோறும் இனிது.
குறள்: 1146கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்திங்களைப் பாம்புகொண் டற்று.
குறள்: 1147ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்நீராக நீளும்இந் நோய்.
குறள்: 1148நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்காமம் நுதுப்பேம் எனல்.
குறள்: 1149அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்பலர்நாண நீத்தக் கடை.
குறள்: 1150தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்கெளவை எடுக்கும்இவ் வூர்.