குறள்: 1211காதலர் தூதொடு வந்த கனவினுக்குயாதுசெய் வேன்கொல் விருந்து.
It came and brought to me, that nightly vision rare,A message from my love,- what feast shall I prepare
( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?
என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்?
வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?
Where with shall I feast the dream which has brought me my dear one's messenger ?
| குறள் எண்: | 1211 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | கனவுநிலை உரைத்தல் |
| இயல்: | கற்பியல் |